12 ஆவது மாடியிலிருந்து விழுந்து தொழிநுட்ப அதிகாரி பலி

210 0

செத்சிரிபாய கட்டடத் தொகுதியில் 12 ஆவது மாடியிலிருந்து விழுந்த தொழிநுட்ப அதிகாரி ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

பத்தரமுல்ல – செத்சிரிபாய கட்டிடத்தில் இன்று காலை மேற்படி நபர் 12 ஆவது மாடியிலிருந்து 3 ஆவது மாடியில் விழுந்து உயிரிழந்துள்ளார் என பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கோட்டே – மாதிவெல பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய பரகொட வித்தானகே துல்சிரி காரியவசம் என்பரே இவ்வாறு மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தவராவார்.

தலைநகர் கொழும்பு தொடர்பான அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் தொழிநுட்ப அதிகாரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் , இவருக்கு திடீரென ஏற்பட்ட வலிப்பு நோயின் காரணமாகவே இவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.