முடிவுக்கு வந்த ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம்

238 0

ரயில்வே ஊழியர்களின் 12 நாள் தொடர் வேலைநிறுத்த போராட்டம் இன்று மாலை கைவிடப்பட்டது. 

ஜனாதிபதி போக்குவரத்து அமைச்சர் சம்பள நிர்ணய சபையின் தலைவர் ஆகியோருடன் ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்தே வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது.

இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் வாசஸ்தலத்தில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை முடித்து கொண்ட ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரனதுங்க சம்பள நிர்ணய சபையின் தலைவர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்தே வேலை நிறுத்தத்தை கைவிடுவதென அவர்கள் தீர்மானித்தனர்.