இன்று தீபாவளி

310 0

diwali_lk3bb8உலகெங்கிலும் வாழும் இந்துக்கள் இன்று தீபாவளி திருநாளை கொண்டாடுகின்றனர்.

தீ என்ற தீமையையும் பா என்ற பாவங்களையும் ஒழித்து தீபங்களை வரிசப்படுத்தி கொண்டாடப்படும் திருநாளாக தீபாவளி அமைந்துள்ளது.

பொது மக்களுக்கு பாவங்களை செய்துவந்த நரகாசுரன் தம்மை க்றிஷ்ண பகவான் அழித்தபோது விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே, இன்றைய நாள் குதூகல நாளாக கொண்டாடப்படுவதாக வரலாறுகள் கூறுகின்றன.

ஒருவர் இறந்தால் அந்த நாளை துக்க தினமாக அனுஷ்டிப்பது இந்துக்களின் வழக்கமாகும் எனினும் தாம் பாவங்களை செய்தமையை ஏற்றுக்கொண்ட நரகாசுரன் தம்மிடம் இருந்து விடுதலை பெற்ற மக்கள் தாம் இறந்த நாளை சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என விடுத்த கோரிக்கையின் பேரிலேயே தீபாவளி இறைவழிபாட்டுடனான குதூகலத் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

இன்றைய நாளை பொருத்தவரையில் இலங்கையின் வடக்கு கிழக்கே உள்ளவர்கள் முழுமையான இறை வழிபாட்டு நாளாக கொண்டாடுகின்றனர்.

மலையகத்தை பொருத்தவரையில் இன்றைய நாள் இறை வழிபாட்டுடன் குதூகல நாளாக கொண்டாடப்படுகின்றது.