யாழில் ஆவா குழுவை பிடிக்க மக்கள் உதவி!

288 0

U

வடக்கில் செயற்படும் ஆவா குழுவுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆவா குழுவை கைது செய்வதற்காக வடக்கின் பல பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் செயற்பாட்டிற்காக சாதாரண பொது மக்களின் ஆதரவு கிடைத்திருப்பதாக குறித்த பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

சுன்னாகம் பொலிஸ் புலனாய்வு பிரிவு பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்