திருச்சி நகைக்கடை கொள்ளை- புதுக்கோட்டையில் வடமாநிலத்தைச் சேர்ந்த 6 பேரிடம் விசாரணை

220 0

திருச்சி நகைக்கடை கொள்ளை தொடர்பாக வடமாநிலத்தைச் சேர்ந்த 6 பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே கரூர் பைபாஸ் சாலையில் உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு, முகமூடிகள் அணிந்து உள்ளே நழைந்த கொள்ளையர்கள், சுமார் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை அள்ளிச் சென்றுள்ளனர்.

இந்த கொள்ளையில் ஈடுபட்டது வடமாநில கொள்ளையர்கள் என்பது விசாரணையில் தெரியவந்திருப்பதாக காவல்துறை கூறி உள்ளது.  கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே புதுக்கோட்டையில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின்போது வடமாநிலத்தைச் சேர்ந்த 6 பேரை தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் போர்வை விற்க வந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.