இளைஞர் சாசனமொன்றை உருவாக்குவதற்கு திட்டம்!-ஹர்ஷண

213 0

இளைஞர், யுவதிகளை ஒன்றிணைத்து இளைஞர் சாசனமொன்றை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் இளைஞர் நடவடிக்கைப் பிரிவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் இளைஞர் அமைப்புகள் மற்றும் வேறு அமைப்புக்களுடன் இணைந்து, இளைஞர் புரட்சியொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர் அமைப்புக்களை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாவும் ஹர்ஷண ராஜகருணா கூறியுள்ளார்.

நாடளாவிய ரீதியிலுள்ள இளைஞர், யுவதிகள் இதில் இணைந்து கொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் போது முன்னெடுக்கப்படும் பிரசார நடவடிக்கையின் ஒரு அங்கமாக இது முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்துள்ளார்.