கோட்டாபய எந்த சந்தர்ப்பத்திலும் எமக்கு சவாலாக அமைய போவது இல்லை-தயா

225 0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளதாக அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

அதேபோல் மேலும் பலர் எதிர்காலத்தில் இணைவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச 55 வீதமான வாக்குகளை பெறுவது உறுதி எனவும் குறிப்பிட்டார்.

எதிரணியான கோட்டாபய ராஜபக்ஷ எந்த சந்தர்ப்பத்திலும் தமது கட்சிக்கு சவாலாக அமைய போவது இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி போட்டியிட்டிருந்தால் அது சவாலாக அமைந்திருக்கும் எனவும் ஆனால் தற்போது அவர்கள் பெயரிட்டுள்ள வேட்பாளரை கண்டு ஒரு போதும் அச்சமடைய போவது இல்லை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்