காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

192 0

பொகவந்தலாவ பகுதியில் வௌ்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த குடும்பஸ்த்தர் சலடமாக மீட்கப்பட்டுள்ளார்.

கெசல்கமுவ ஒயாவிற்கு அருகில் குழி ஒன்றில் இருந்து அவரின் சடலம் இன்று (02) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ பகுதியில் பெய்த கடும் மழையினால் காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் கேசல்கமுவ ஒயாவில் வெள்ள நீர் பெருக்ககெடுத்ததன் காரணமாக குறித்த நபர் கடந்த 30 ஆம் திகதி இரவு 8 மணி அளவில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார்.

இந்நிலையில், அவரை தேடும் பணிகள் இன்று இரண்டாவது நாளாகவும் கடற்படை மற்றும் பொலிஸாருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில், கெசல்கமுவ ஓயாவிற்கு அருகில் குழியொன்றில் இருந்து அவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் சடலம் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 2 கிலோமீற்றர் தொலைவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சடலம் ஹட்டன் நீதவான் நீதிமன்ற விசாரணைகளின் பின்னர், பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.