ரயில்வே ஊழியர்களின் போராட்டம் : முக்கிய தீர்மானம் இன்று மாலை!

311 0

ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்து இன்று மாலை முக்கிய தீர்மானம் எடுக்கப்படும்மென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சம்பள முரண்பாட்டை நீக்குதல் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே ஊழியர்கள் கடந்த புதன்கிழமை நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்றும் தொடங்குகிறது.

ரயில்வே திணைக்களத்தைச் சேர்ந்த ரயில் சாரதிகள், உதவியாளர்கள் , ரயில் நிலைய அதிபர்கள் , சமிஞ்ஞையாளர்கள், பாதுகாவலர்கள் என 15 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயெ அரசாஙம் இது தொடர்பில் இன்று மாலை முக்கிய தீர்மானம் எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.