செய்தி எழுதிய செய்தியாளர் விசாரணைக்கு அழைப்பு!

283 0

டக்ளஸ் தேவானந்த, வரதராஜப் பெருமாள் உள்ளிட்டோர் கோத்தாபய ராஜபக்சவுடன் இணைந்து தமிழ் மக்களை நசுக்க கங்கணம் கட்டியுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்க தலைவி மரிய சுரேஷ் ஈஸ்வரி யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பிலான செய்தி எழுதிய வீரகேசரி பத்திரிகையின் யாழ் பிராந்திய அலுவலக செய்தியாளர் தில்லைநாதன் சோபிதனை பொலிஸ் தலைமையகம் விசாரணைக்கு அழைத்துள்ளது.

கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு விசாரணைக்காக வருமாறே அழைக்கப்பட்டுள்ளார்.