நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த பல தடைகள் உண்டு-தேசப்பிரிய

243 0

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த சட்ட ரீதியாக பல தடைகள் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்த அணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை கூறினார்.

தற்போது உள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்த காணப்படும் பிரச்சினைகள் மற்றும் சட்டத்தை பலப்படுத்துவதுவதில் உள்ள சிக்கல்கள் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த தடையாகவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களை கட்டுப்படுத்த கடுமையான கொள்கைகளை கையாண்டாலும் அதில் பிரயோசனம் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.