வவுனியாவில் புதையல் தோண்ட முற்பட்ட எட்டுபேர் கைது

928 0

வவுனியாவில் நேற்று இரவு நெளுக்குளம் பொலிஸாரால் புதையல் தோண்ட முற்பட்ட எட்டுபேரைக் கைது செய்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நெளுக்குளம் பொலிஸாருக்கு நேற்று இரவு 10மணியளவில் இராசேந்திரகுளம் பகுதியில் புதையல் தோண்டுவதாகக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி திஸாநாயக்க தலைமையில் சென்ற குழுவினர் இராசேந்திரகுளம்  மயானத்திற்கு அண்மித்த பகுதியில் புதையல் தோண்டத் தயாராக இருந்த எட்டு பேரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களை வவுனியா பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் புதையல் தோண்டுவதற்காகப் பயன்படுத்திய மண்வெட்டிகள், அலவாங்கு, பிக்கான், பூஜைபொருட்கள் என்பனவற்றை கைப்பற்றியுள்ளனர்.

வவுனியா விநாயகபுரம், கண்டி, காலி பகுதிகளைச் சேர்ந்த 27,33,40,44மற்றும் 57 வயதுடைய நபர்களைக் கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் மேலும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.