பாராளுமன்ற ஊடக மத்திய நிலைய திறப்பு நிகழ்வு 30 ஆம் திகதி

252 0

பாராளுமன்ற அறிக்கையிடலில் ஈடுபடும் ஊடகவியலாளர்களின் வசதி கருதி முழுமையாக நவீன மயப்படுத்தப்பட்ட ஊடக மத்திய நிலையத் திறப்பு விழா இம்மாதம் 30 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

மேலும் இந் நிகழ்வில் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க உள்ளிட்ட பாராளுமன்ற  அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த நவீன மயப்படுத்தப்பட்ட ஊடக மத்திய நிலையத்தில் முழுமையாக கட்டமைக்கப்பட்ட தொலைக்காட்சி மற்றும் வானொலி கலையரங்கம் என்பன நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு,இதற்கு மேலதிகமாக ஊடகவியலாளர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து அறிக்கையிடும் அனைத்து வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.