பருத்தித்துறையில் தியாகி திலீபனின் நினைவு நாள் நிகழ்வு அனுஷ்டிப்பு!

287 0

யாழ். பருத்தித்துறை பகுதியில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வுகள் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்றன. இதன்போது திலீபனின் உருவப்படத்துக்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டு தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தியாக தீபம் திலீபனின் 32ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கின் பல்வேறு மாவட்டங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.