தியாக தீபம் உண்ணாவிரதமிருந்த இடத்தைச் சென்றடைந்தது நடைபயணம்

248 0

தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்தியுடனான நடைபயணம் அவர் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த இடத்தைச் சென்றடைந்தது.

இதனையடுத்து அங்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இந்நிகழ்வில் பலர் கலந்துகொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, 32ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு யாழ். நல்லூர் பின் வீதியில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் 32 அடி உயரத்தில் அவரின் பாரிய பதாதையொன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.