கிளிநொச்சியில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள்

241 0

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் கிளிநொச்சியிலும் இடம்பெற்று வருகின்றன.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இந்த நிகழ்வுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு ஆரம்பமானது.

இதன்போது தியாக தீபத்தின் உருவப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவஞானம் ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தார்.

வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் ச.பசுபதிப்பிள்ளை ஆகியோர் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து திலீபனின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.