நிதி நகர திட்டத்தில் மண் நிரப்பும் நடைமுறை முயற்சியை பாராட்டுகிறேன்

320 0

25093661ranjithநிதி நகர திட்டத்தில் மண் நிரப்பும் நடைமுறையில் இருந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முயற்சியை வரவேற்பதாக கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறியுள்ளார்.

கடந்த இரண்டு வாரத்திற்குள் நீர்கொழும்பில் இருந்து திக்ஓவிட்ட வரையிலுள்ள கடற்பரப்பில் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்ததாக அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த பிரச்சினையை சுமுகமான முறையில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்த ஜனாதிபதி, பிரதமர், மைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவிப்பதாக கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.