ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரை 7 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்

246 0
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரை 7 வேட்பாளர்கள் கட்டுபணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பாக நால்வரும், சுயேட்சை குழு சார்பாக மூவரும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

அபரெக்கே புஞ்ஞானந்த தேர், ஜயந்த கெடகொட, சிறிபால அமரசிங்க, அஜந்தா விஜேசிங்க, சமந்த பெரேரா, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஆரியவங்ச திசாநாயக்க ஆகியோர் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

கடந்த 19 ஆம் திகதி முதல் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.