முக்கிய இரு திருடர்களை முதலில் தண்­டிக்­க­ வேண்டும் – அநுரகுமார

276 0

நாட்டில் இடம்­பெறும்  மிகப்­பெ­ரிய குற்­றங்கள் அனைத்­தி­னதும் பின்­ன­ணியில் அர­சி­யல்­வா­தி­ களே உள்­ளனர். ரணில் ஆட்­சிக்கு வந்தால் பிணை ­முறி ஊழலும், மஹிந்த ஆட்­சிக்கு வந்தால்  தாமரை கோபுர ஊழலும் நினை­வுக்கு வரும்.  ஏனைய திரு­டர்­களை தண்­டிக்க முன்னர் பாரிய திரு­டர்கள் இரு­வ­ரையும் தண்­டிக்க வேண்டும் என்று தேசிய மக்கள் சக்­தியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் அனு­ர­கு­மார திசா­நா­யக  தெரி­வித்தார்.

தேசிய மக்கள் சக்தி இயக்­கத்தால்  நேற்று  முன்­தினம்  ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த  விவ­சாய மாநாட்டில் கலந்­து­கொண்ட மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­வரும் தேசிய மக்கள் சக்­தியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரு­மான அனு­ர­கு­மார திசா­நா­யக மேலும் கூறு­கையில்,

இந்த நாட்டில் சிறந்த பொலிஸ் துறை­யினர் உள்­ளனர். குற்­றங்­களை விரை­வாக கண்­ட­றியக் கூடிய திறமை அவர்­க­ளிடம் உள்­ளது. கிரா­மங்­களில் நக­ரங்­களில் ஏதேனும் ஒரு குற்றம் நடந்தால் வெகு விரைவில் அதனை கண்­ட­றி­யக்­கூ­டிய திறமை அவர்­க­ளிடம் உள்­ளது. எனினும் இந்த நாட்டில் கண்­ட­றிய முடி­யாத, யார் குற்­ற­வா­ளிகள் என வெளிப்­ப­டுத்த முடி­யாத மிகப்­பெ­ரிய குற்­றங்கள் இடம்­பெ­று­கின்­றன. அவை அனைத்தின் பின்­ன­ணி­யிலும் அர­சாங்­கமே உள்­ளது. பிர­தா­ன­மாக    போதைப்­பொருள் கடத்தல் அனைத்தின் பின்­ன­ணி­யிலும் அர­சியல் சக்தி  உள்­ளது. இந்த நாட்டில் போதைப்­பொருள்   உற்­பத்தி செய்­ய­மு­டி­யாது. வெளி­நா­டு­களில் இருந்து வரு­வ­தென்றால்  விமா­னங்­களில் அல்­லது கப்­பல்­களில் தான் வர­வேண்டும். இவ்­வாறு வரும் போதைப்­பொ­ருட்­களை கடத்தும் பின்­ன­ணியில் அர­சி­யல்­வா­திகள் மட்­டுமே உள்­ளனர்.

இதனை நிறுத்த வேண்டும் என்றால் அது தேசிய மக்கள் இயக்­கத்தால் மட்­டுமே முடியும். நாம் ஆட்­சிக்கு வந்தால் இந்த நாட்டில் போதைப்­பொருள் கடத்தல் அனைத்­தையும் நிறுத்­துவோம். இந்த நாட்டில் இளம் சமூ­கத்­திற்­கான ஆரோக்­கி­ய­மான சூழலை நாம்  உரு­வாக்­கிக்­கொ­டுப்போம்.

இவ்­வா­றான மாற்றம் ஒன்று வேண்டும் என்று வந்­துள்ள முதல் சந்­தர்ப்பம் இது­வல்ல. இதற்கு முன்­னரும் பல வாய்ப்­புக்கள் வந்தும் மக்கள் சரி­யான தெரிவை முன்­னெ­டுக்­க­வில்லை.  நாட்­டையும் மக்­க­ளையும் நாச­மாக்கும் தலை­மைத்­து­வத்­துக்கே மக்கள் ஆத­ரவை கொடுத்­தனர். தெரி­வு­செய்த பின்னர் இந்த நாட்டு  மக்­க­ளுக்கு நடந்­துள்ள நன்­மைகள் என்ன? சகல வழி­மு­றை­யிலும் நாட்­டினை நாச­மாக்கும் ஆட்­சியே இது­வரை இடம்­பெற்­றது. இனியும் இந்த செயற்­பா­டு­களை மக்கள் ஏற்­று­கொள்ள போகின்­றீர்­களா அல்­லது மாற்­றத்தை உரு­வாக்­கப்­போ­கின்­றீர்­களா என்­பதே கேள்­வி­யாக உள்­ளது.

இப்­போது நாம் அனை­வரும் ஒன்­றி­ணைந்து புதிய மாற்­றத்தை உரு­வாக்­குவோம். இப்­போது நாம் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­த­வில்லை என்றால் வேறு யார் செய்­வது என்ற கேள்வி உள்­ளது. அச்சம், சந்­தேகம் இல்­லாத நாட்­டினை உரு­வாக்க வேண்டும் என்றால், சுகா­தார ரீதியில் கல்வி, மருத்­துவ தரங்­களை உயர்த்­திக்­கொள்ள வேண்டும் என்றால் இப்­போது இருக்கும் ஒரே மாற்­று­வழி நாம் என்­பதே உண்­மை­யாகும். ஆகவே கிரா­மங்­களில் இருந்து எமது போராட்­டங்­களை நாம் மாற்­றி­ய­மைக்க முன்­வர வேண்டும்.

ரணில் ஆட்­சிக்கு  வந்தால் பிணை­முறி ஊழல் நினை­வுக்கு வரும், மஹிந்த ஆட்­சிக்கு வந்தால் தாமரை கோபுர ஊழல் நினை­வுக்கு வரும். இவர்கள் இரு­வ­ருக்கும் திரு­டர்­களை  தண்­டிக்க முடி­யாது. கள்­ளர்­களை தண்­டிக்க முன்னர் முதலில் இவர்கள் இரு­வ­ரையும் தண்­டிக்க வேண்டி வரும். ஆகவே ஊழல் குற்­றங்கள் இல்­லாத ஆட்­சியை உரு­வாக்­கவும் குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக போரா­டக்­கூ­டி­ய­து­மான  ஒரே இடம் எமது தரப்­பே­யாகும். கடந்த காலங்­களில் மக்­களின் சொத்­துக்­களை சூறை­யா­டி­ய­வர்கள் இன்று மீண்டும் மக்­க­ளிடம் வாக்கு கேட்­பது வேடிக்­கை­யா­னது.

அதேபோல் இவர்கள் இரு­வ­ரையும் பழி­வாங்க நாம் கூற­வில்லை. ஆனால் இவர்­க­ளிடம் உள்ள மக்­களின் சொத்­துக்­களை மீண்டும் மக்­க­ளிடம் கொடுக்­கவே நாம் முன்­வ­ரு­கின்றோம். இவர்கள் தமக்கு  உணவு இல்­லாமல்   மக்­களின் பணத்தில் கைவிக்­க­வில்லை, உண்ண வழி­யில்லை என்றால் கள­வெ­டுக்கும்  நபர் மீது சிறிய இறக்கம் வரும்.

ஆனால் இவர்கள் அதற்­காக கொள்­ளை­ய­டிக்­க­வில்லை. இவர்கள் வெளி­நா­டு­களில் வீடுகள் வாங்­கவும், சுக­போக வாழ்க்கை வாழவும் மட்­டுமே கொள்­ளை­ய­டித்­தனர். இவர்­களின் சொத்­துக்­களை மக்கள் மய­மாக்க வேண்டும். ஒரு கள்­ளனால்  இன்­னொரு கள்­ள­னுக்கு தண்­டனை வழங்க முடி­யாது. அதனால் தான் இத்­தனை கால­மாக குற்­ற­வா­ளிகள் எவரும் தண்­டிக்­கப்­ப­ட­வில்லை. ஆனால் நாம் ஆட்சிக்கு வந்தால் குற்றவாளிகளை தண்டிப்போம்.

நீண்ட காலமாக நாம் இந்த நாட்டுக்காக அரசியல் செய்துள்ளோம். எமக்கு இந்த நாட்டில் மாற்றங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற ஆசையும்  எதிர்பார்ப்பும் உள்ளது. எமது இலக்கு இப்போது நெருங்கி வந்துள்ளது என்றே நினைக்கிறோம். இதே உத்வேகத்துடன் வெற்றியின் எல்லையை சென்றடைவோம் அதற்காக அனைவரும் எம்முடன் இணையுங்கள் என அவர் குறிப்பிட்டார்.