ஜப்பானில் இருந்து, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுக்கு 5.3 டன் எடையுள்ள பொருட்கள், விண்கலம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து, விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன. இங்கு சுழற்சி முறையில் விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு தேவையான பொருட்கள் விண்கலம் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில், பிரச்சினை சரிசெய்யப்பட்ட நிலையில், சர்வதேச விண்வெளி மையத்திற்கு இன்று ஆளில்லா விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 1.05 மணிக்கு எச்2பி ராக்கெட் மூலம் இந்த சரக்கு விண்கலம் ஏவப்பட்டுள்ளது.
இந்த விண்கலத்தில் விண்வெளி வீரர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பேட்டரிகள், ஆய்வுக்கு தேவையான உபகரணங்கள் என 5.3 டன் எடையுள்ள பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.