அரிப்பில் ஹெரோயின்

371 0

dfdமன்னார் – அரிப்பு கடற்பரப்பில் வைத்து, இலங்கைக்கு கடத்தப்பட்ட ஹெரோயின் போதைப் பொருள் தொகுதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் 3 இந்தியர்கள் கைதாகியுள்ளனர்.

மீட்கப்பட்ட போதைப் பொருளின் பெறுமதி 2 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை அண்மையில் முத்தரிப்புதுறைப் பகுதியில் வைத்து இரண்டு கடற்படை அதிகாரிகள் தாக்கப்பட்டனர்.

இது குறித்து செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள கடற்படையினர், இந்த தாக்குதலுக்கும் போதைப் பொருள் கடத்தல்களுக்கும் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளது.