முல்லைத்தீவில் வீதி மறியல் போராட்டம்-படங்கள் இணைப்பு

316 0

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அருகில், நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த மதகுருவின் உடல் தகனம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது முல்லைத்தீவில் வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வீதியை மறித்து பெருந்திரளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இதன்போது அரசாங்கம் மற்றும் ஐ.நா. சபைக்கான மகஜர்கள் மாவட்ட செயலாளரிடம் வழங்கப்படவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் மதகுருமார்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு பழைய வைத்தியசாலை முன்பாக இன்று காலை ஒன்றுகூடிய மக்கள், அங்கிருந்து பேரணியாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.