கட்சியின் யாப்பிற்கு அமைய ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார்- அகில

230 0
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கட்சியின் யாப்புக்கு அமைய மிக விரைவில் நியமிக்கப்படுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் செயற்குழு மற்றும் பாராளுமன்ற குழு கூடி இது தொடர்பில் இறுதி முடிவுக்கு வரவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.

கட்சியின் யாப்பின் படி வேட்பாளரை தெரிவு செய்வதற்காக நியமனக் குழு ஒன்றை அல்லது குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

செயற்குழுவில் 48 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத வேறு வேறு அமைப்புக்களின் 20 உறுப்பினர்கள் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி, குறித்த தரப்பினரில் அல்லது ஐக்கிய தேசிய கட்சியினரில் இருந்து வேட்பாளரை தெரிவு செய்ய முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.