நம்பகத்தன்மைக்கு சர்வதேச பங்களிப்பு அவசியமானது

4847 0

624654Human_Rightsநீதிப்­பொ­றி­முறை விசா­ர­ணையில் சர்­வ­தேச பங்­க­ளிப்­பா­னது நம்­பகத்தன்­மை­யையும் சுயா­தீ­னத்­தையும் பக்­க­ச்சார்­பற்ற தன்­மை­யையும் உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு அவ­சி­ய­மா­னது என்று நான் கரு­து­கிறேன். எமது விசா­ரணை கண்­டு­பி­டிப்­புக்­க­ளின்­படி சில குற்­றச்­சாட்­டுக்கள்யுத்த குற்­றங்­க­ளா­கவும் மனித குலத்­திற்கு எதி­ரான குற்­றங்­க­ளா­கவும் இருக்­கலாம் என்று ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் தெரி­வித்தார்.

ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நேற்­றைய தினம் தன­து­இ­லங்கை குறித்த வாய்­மூல அறிக்­கையை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வெளி­யிட்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.அவர் குறு­கிய உரையில் மேலும் குறிப்­பி­டு­கையில்அர­சாங்கம் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை பொறி­மு­றை­யுடன் இணைந்து செயல்­ப­டு­கின்­றமை, விசேட ஆணை­யா­ளர்­க­ளுக்கு அழைப்பு விடுக்­கின்­றமை போன்ற விசேட திருப்­தி­யான தன்­மை­யுடன் வாய்­மூல அறிக்­கையை வெளியி­டு­கிறேன். அண்­மைய மாதங்­களில் இலங்­கை­யா­னது பல ஆணை­யா­ளர்­க­ளையும் விசேட அறிக்­கை­யா­ளர்­க­ளையும் காணா­மல்­போனோர் குறித்த குழு­வையும் இலங்­கைக்கு அழைத்­தி­ருந்­தது.

இலங்கை அர­சாங்கம் நல்­லி­ணக்­கத்தை ஊக்­கு­விப்­ப­தற்கு சில நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளது. குறிப்­பாக 1950 ஆம் ஆண்­டுக்கு பின்னர் தேசிய கீதத்தை தமிழில் பாடி­யமை மற்றும் யுத்த வெற்றி விழா­விற்கு பதி­லாக நினைவு தினம் கொண்­டா­டப்­பட்­டமை என்­ப­வற்றை குறிப்­பி­டலாம்.

அத்­துடன் அர­சி­ய­ல­மைபை உரு­வாக்கும் பணி­களும் முக்­கிய கட்­டத்தை அடைந்­துள்­ளன. பாரா­ளு­மன்றம் அர­சியல் நிர்­ணய சபை­யாக மாறி­யுள்­ள­துடன், 2017 ஆம் ஆண்டு புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­காக சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­படும். எனினும் சிறு­பான்மை மக்கள் மத்­தி­யிலும் பாதிக்­கப்­பட்டோர் மத்­தி­யிலும் நம்­பிக்கை ஏற்­படும் வகையில் அர­சாங்கம் உண­ரக்­கூ­டி­ய­தான வேலைத்­திட்­டங்­களை மிகவும் விரை­வாக முன்­னெ­டுக்­க­வில்லை என்­பது கவ­னத்­திற்­கு­ரி­ய­தாகும்.

மறு­சீ­ர­மைப்பு செயற்­பா­டு­க­ளா­னது ஆபத்­தான கட்­டத்­தி­லேயே இருப்­ப­தா­கவும் உண­ரப்­ப­டு­கி­றது. வடக்கு, கிழக்கில் காணி­களை விடு­விக்கும் செயற்­பா­டா­னது இன்னும் தாம­த­மா­கவே காணப்­ப­டு­கி­றது. நான் பெப்­ர­வரி மாதம் இலங்­கைக்கு சென்­ற­போது இந்த காணி விவ­கா­ரத்தை முடி­வுக்கு கொண்­டு­வர விசேட செய­லணி நிய­மிக்­கப்­பட்டு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது.

எனினும் இந்த விட­யத்தில் குறை­வான நம்­பகத் தன்­மை­யா­னது பாதிக்­கப்­பட்ட மக்கள் இடம்­பெ­யர்ந்த மக்கள் மத்­தியில் சந்­தே­கத்தை எழுப்­பி­யுள்­ளது. பயங்­க­ர­வாத தடைச் சட்டம் தொடர்ந்து பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­மையை கரிச.ையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இன்னும் 250 பேர் தடுப்­பி­லுள்­ளனர்.

எனினும் புதி­தாக 40 பேர் இந்த சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­டுள்­ளமை அர­சாங்­கத்தின் சட்­டத்தை ஆட்சிப் படுத்தும் செயற்­பட்டை கேள்­விக்­குற்­ப­டுத்­து­கி­றது. வடக்கு, கிழக்கில் இரா­ணுவப் பிர­சன்னம் மிகவும் அதி­க­மாக காணப்­ப­டு­கி­றது. அச்­சு­றுத்­தல்கள், கண்­கா­னிப்­புகள் இருக்­கின்­றன. இது அர­சாங்­கத்­திற்கு சவாலை ஏற்­ப­டுத்தும் விட­ய­மாகும்.

மேலும் இரா­ணுவப் படை மற்றும் பொலிஸார் கைது செய்­யப்­படும் நபர்கள் மற்றும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­களின் அடிப்­படை உரி­மையை பேண வேண்­டு­மென ஜனா­தி­பதி தெரி­வித்­தள்­ளதை வர­வேற்­கிறேன். இலங்­கையில் புதிய பாது­காப்பு சட்­டங்­களை வரை­யு­மாறு ஆலோ­சனை கூறு­கிறேன்.

நீதி­மன்­றத்தின் முன் நிலு­வையில் காணப்­ப­டு­கின்ற சில முக்­கிய வழக்­கு­களை விரை­வாக விசா­ரிக்க வேண்டும். இதே­வேளை காணா­மல்­போனோர் பற்­றிய அலு­வ­லகம் அமைக்­கப்­ப­டு­கின்­றமை அவ­தா­னிக்­க­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. எனினும் இந்த வரைபை தயா­ரிப்­ப­தற்கு வரை­ய­றுக்­கப்­பட்ட மக்கள் ஆலோ­ச­னை­களை நடத்­தப்­பட்­ட­தாக நான் அறி­கிறேன்.

இந்த வரைபை தயா­ரித்த நிபு­ணர்­களே உண்­மையை கண்­ட­றி­வ­தற்­கான ஆணைக்­குழு மற்றும் விசேட நீதி­மன்றம் ஆகி­ய­வற்றை அமைப்­ப­திலும் செயற்­பட்டு வரு­கின்­றனர். இந்த செயற்­பாடு மிகவும் வர­வேற்­கத்­தக்­கது. ஆனால் இந்த செயற்­பாடு வெ ளிப்­ப­டைத்­தன்­மை­யுடன் முன்­னெ­டுக்­கப்­பட்டால் பாதிக்­கப்­பட்­டோரின் ஈடு­பாடு குறித்து சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­விடும்.

ஆனால் நீதிப்­பொ­றி­முறை விசா­ர­ணையில் சர்­வ­தேச பங்­க­ளிப்­பா­னது நம்­பகத் தன்­மை­யையும் சுயா­தீ­னத்­தையும் பக்­க­சார்­பற்ற தன்­மை­யையும் உறுதிப்படுத்துவதற்கு அவசியமானது என்று நான் கருதுகிறேன். எமது விசாரணை கண்டுபிடிப்புக்களின்படி சில குற்றச்சாட்டுக்கள் யுத்த குற்றங்களாகவும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களாகவும் இருக்கலாம்.

நீதிப்பொறிமுறையை அமைக்கும் செயற்பாட்டில் மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்க தயாராகவிருக்கின்றது. எனினும் இந்த மாற்று செயற்பாடுகளுக்கு காலம் தேவையாகும்.அரசியலமைப்பு மறுசீரமைப்பு, நிலைமாறுகால நீதி, பாதுகாப்பு துறை மறுசீரமைப்பு உள்ளிட்ட செயற்பாடுகள் எந்தவொரு அரசுக்கும் சவாலானவையாகும்.

Leave a comment