தியாகி திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்தி கிளிநொச்சியை சென்றடைந்தது

244 0

தியாகி திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு வவுனியாவில் இருந்து பயணித்த பேரணி கிளிநொச்சிக்கு சென்றடைந்துள்ளது.

கிளிநொச்சி பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் தற்போது பேரணி பயணிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல், சிங்கள குடியேற்றங்களை நிறுத்துதல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், இனஅழிப்பு மற்றும் காணாமலாக்கபட்டவர்களை கண்டறிய சர்வதேச விசாரணை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பேரணியை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியிலிருந்து கடந்த சனிக்கிழமை ஆரம்பமாகிய இந்த பேரணி, தியாக தீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியுடன் இணைந்து யாழ்பாணத்தில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவு திடலை சென்றடையவுள்ளது.