சொலிசிஸ்டர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் பொதுச் சேவை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.
அவர் இன்று(திங்கட்கிழமை) இவ்வாறு பொதுச் சேவை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவன்கார்ட் நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியுடனான சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் பல்வேறு முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது
இதனையடுத்து சட்ட மாஅதிபர் திணைக்களம் அவர் மீது ஒழுக்காற்று விசாரணகளை மேற்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளது,
இந்தநிலையிலேயே பொதுச் சேவை ஆணைக்குழு அவரிடம் விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.