பொதுக்­கூட்­ட­ணியில் சஜித்தை களம் இறக்­கு­வது குறித்து ஆலோ­சனை

192 0

ஐக்­கிய தேசியக் கட்­சியின்  ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தா­சவை நிய­மிக்க  வேண்டும் என்று ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின்  பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ள­துடன் அவ்­வாறு கள­மி­றங்­கு­வ­தற்கு மறுப்புத் தெரி­விக்­கப்­பட்டால் பரந்­து­பட்ட கூட்­ட­ணியை அமைத்து அதன் வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தா­சவை போட்­டி­யி­ட­வைப்­பது குறித்து ஆரா­யப்­பட்டு வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

ஜனா­தி­பதி தேர்தல் திகதி அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் விட­யத்தில் கட்­சிக்குள் தொடர்ந்தும் நெருக்­க­டிகள் நிலவி வரு­கின்­றது. இந்­நி­லையில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் கூட்­டணிக் கட்­சிகள் தனித்­த­னியே சந்­திப்­புக்­களை மேற்­கொண்டு தீர்­மா­னங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றன.

நேற்று முன்­தினம் இரவு சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரி­யவை சந்­தித்த அமைசர் சம்­பிக்க ரண­வக்க ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் குறித்து கலந்­து­ரை­யாடல் ஒன்­றினை முன்­னெ­டுத்­துள்ளார். ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் விட­யத்தில்  அக்­கட்­சியின் செயற்­குழு கூட்­டத்தில் தீர்­மானம் எடுப்­பதில் எந்த அர்த்­தமும் இல்லை, ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற குழுக் கூட்­டத்தில் இந்த விட­யத்தை கலந்­து­ரை­யாடி அதில் பெரும்­பான்மை ஆத­ரவை பெறும் நபர் யார் என்­பதை பார்க்க வேண்டும். மக்­களின் செல்­வாக்கை பெற்­ற­வரும் பிர­ப­ல­மான நப­ரா­கவும் கட்­சியில் இருப்­ப­வ­ரையே வேட்­பா­ள­ராக கள­மி­றக்க வேண்டும். அவ்­வாறு கள­மி­றக்­கினால் மட்­டுமே கூட்­ட­ணி­யாக எம்மால் வெற்றி பெற முடியும். இந்த விட­யத்தில் இர­க­சி­ய­மாக பேச்­சு­வார்த்தை நடத்தி இர­க­சி­ய­மாக வேட்­பா­ளரை கள­மி­றக்கி எந்த பயனும் இல்லை. ஆகவே இது குறித்து நீங்­களும் கவனம் செலுத்த வேண்டும். தனித்து தீர்­மானம் எடுத்தால் கட்­சி­யாக இணைந்து பய­ணிக்­கவும் எவரும் முன்­வ­ரப்­போ­வ­தில்லை, கட்சி இரண்­டாக பிள­வு­படும். ஆகவே உங்­களின் நிலைப்­பாட்டை பிர­த­ம­ரிடம் எடுத்து கூறி ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற குழுக் கூட்­டத்தில் ஒரு தீர்­மானம் எடுக்க  வலி­யு­றுத்த வேண்டும் என்ற கார­ணி­களை அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க  சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­ய­விடம் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

இந்­நி­லையில் நேற்று பாரா­ளு­மன்ற கட்­டி­டத்­தொ­கு­தி­யிலும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­சவை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர். இதன்­போதும் பரந்த கூட்­டணி அமைத்து தேர்­தலை  சந்­திப்­பது  குறித்தே பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டுள்­ளது.

இந்த சந்­திப்பில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்­சி­களின்  தலை­வர்­க­ளான ரவூப் ஹக்கீம் , சம்­பிக்­க­ர­ண­வக்க, பழ­னி­தி­காம்­பரம், ரிஷாத் பதி­யூதின் ஆகி­யோரும்  கலந்­து­கொண்­டுள்­ளனர்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் சார்பில் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­சவை கள­மி­றக்க எதிர்ப்பு தெரி­விக்­கப்­ப­டு­மானால் அந்த முயற்­சியை கைவிட்டு ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­காளிக் கட்­சிகள் அனைத்­தையும் மற்றும் தம்­முடன் இணைந்து பய­ணிக்­கக்­கூ­டிய தமிழ், முஸ்லிம் கட்சிகள் அனைத்தையும் இணைந்துக்கொண்டு பரந்த கூட்டணி ஒன்றினை உருவாக்கி அதன் வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நியமிப்போம் என்ற யோசனை இவர்கள் முன்வைத்துள்ளனர்.

இதனை அமைச்சர் சஜித் பிரேமதாசவிடமும் கூறியுள்ளதுடன் இந்த வேலைத்திட்டம் குறித்த துரித நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு செயற்படுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.