நிறைவேற்றதிகார ஜனாதிபதி விடயத்தில் நல்லாட்சி அரசாங்கத்தின் சுயநலம் வெளிப்பட்டுள்ளது-சுமந்திரன்

183 0

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான நகர்விற்கு நல்லாட்சி அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றமை பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.அத்துடன் இது அவர்களது உச்சளவிலான சுயநலத்தையும், சந்தர்ப்பவாத தன்மையையுமே வெளிப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.