சென்னையில் சுடச்சுட உடும்பு இரத்தம் விற்பனை

307 0

9999_25102016_kll_cmyசென்னை எம்.ஜி.ஆர். நகரில் உடும்பை கொன்று அதன் இரத்தத்தை 5000 விற்பனை செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வளைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எம்ஜிஆர் நகரில் ஒரு இடத்தில் நரிக்குறவர்கள் சிலர் உடும்பை பிடித்து அதை உயிருடன் கழுத்துப்பகுதியை வெட்டி அதன் பீச்சியடி இரத்தத்தை சுடச்சுட ஒரு கிளாசில் பிடித்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து குடிக்கின்றனர்.

உடும்பு உறுதியான விலங்கு என்பதால் அதன் இரத்தம் குடித்தால் உடல் வலிமை பெறும், ஆண்மை விருத்தியாகும் தாதுபுஸ்டி உண்டாகும் மற்றும் சர்க்கரை, இரத்தக்கொதிப்புக்கு போன்றவைகளுக்கு சிறந்ததாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் உடும்பு கறி சாப்பிட்டால் உடம்புக்கு மிகவும் சிறந்தது என முந்தைய காலத்தில் இருந்தே நம்பப்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வனவிலங்குகள் பட்டியலில் அரிய விலங்காக உடும்பு உள்ளது. சிங்கம், புலிக்கு அடுத்து உடும்பு பாதுகாப்பு பட்டியலில் உள்ளது.

புலி, சிங்கத்தை கொல்வதும் உடும்பை கொள்வதும் ஒன்று தான்.

இதனால் அவர்களுக்கு மிக கடுமையான தண்டணை கிடைக்கும். ஆனால் அதைபற்றி கவலைப்படாமல் உடும்பை கொன்று அதன் இரத்தத்தை நரிக்குறவர்கள் விற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.