இரத்தினக்கல் வாங்க வந்தவரிடம் 14 இலட்சம் கொள்ளை

278 0

இரத்தினக்கல் ஒன்றை வாங்க வந்த நபரிடம் இருந்த 14 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பெஹலியகொடை மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக சந்தேகநபர் நேற்று (15) இரவு அவரின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

35 வயதுடைய கந்தானை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் வத்தளை நீதவான் நீதிமன்றில் இன்று (16) முற்படுத்தப்படவுள்ளார்.