மழை பெய்து வருவதால் இந்தியா – தென்ஆப்பிரிக்கா போட்டிக்கான டாஸ் சுண்டப்படுவதில் தாமதம்

307 0

தரம்சாலாவில் நடைபெற இருக்கும் இந்தியா – தென்ஆப்பிரிக்கா டி20 போட்டிக்கான டாஸ் போடுவது மழையால் தாமதமாகியுள்ளது.

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி தரம்சாலாவில் இன்றிரவு 7 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. இதற்கான டாஸ் சரியாக 6.30 மணிக்கு சுண்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தரம்சாலாவில் மழை பெய்து வருவதால் டாஸ்  சுண்டப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. மழை பெய்து வருவதால் 20 ஓவர்கள் முழுவதும் வீசப்படுமா? என்பது கேள்விக்குறிதான்.

இதைப் பற்றி 311 பேர் பேசுகிறார்கள்