கஞ்சிப்பானையின் தந்தை, சகோதரர்கள் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்!

247 0

போதைப்பொருள் வர்த்தக குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் உள்ள கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை மற்றும் சகோதரர் உள்ளிட்ட ஆறு பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர்களை காலி நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்திய போதே, எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

புஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கஞ்சிப்பானை இம்ரானிற்கு வழங்குவதற்காக இரண்டு கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் இரண்டு மின்னேற்றிகளையும் எடுத்துச் சென்ற அவரின் தந்தை, சகோதரர் உள்ளிட்ட ஆறு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

மேலும் இதன்போது அவர்கள் கொண்டுசென்ற உணவு பொதியில் இரகசியமாக இந்த பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.