ரணில் – சஜித்திற்கிடையிலான முரண்பாடு கோட்டாவின் வெற்றியை உறுதி செய்கிறது-ரஞ்சன்

257 0

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு இடையிலான கருத்து முரண்பாடுகள், கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியை உறுதி செய்வதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக இழுபறி நிலை ஏற்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறான கருத்தை முன்வைத்தார்.

மேலும் பிரதமர் மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு இடையில் காணப்படும் இந்த இழுபறி நிலைமையால், கோட்டாபய ராஜபக்ஷவுக்குத் தான் பலன் ஏற்படுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கோட்டாவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில்தான் இவர்களது இந்த கருத்து முரண்பாடுகள் காணப்படுவதாகவும் எனவே, இவர்கள் இருவரும் ஒரே மேடையில் ஒன்றிணைவதன் மூலமே கோட்டாவின் தோல்வியை உறுதிப்படுத்த முடியும் என்றும் ரஞ்சன் ராமநாயக்க மேலும் தெரிவித்தார்.