கேரளா கஞ்சாவுடன் நால்வர் கைது

226 0

திருகோணமலை மூன்றாம் கட்டை பிரதேசத்தில் 5 1/2 கிலோ கேரளா கஞ்சாவுடன் நால்வரை நேற்று இரவு கைது செய்ததாக திருகோணமலை மாவட்ட பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

வெளி மாவட்டத்தில் இருந்து விற்பனைக்காக திருகோணமலைக்கு வேன் ஒன்றில் கொண்டுவரப்பட்ட கேரளா கஞ்சாவுடனேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களையும் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவையும் திருகோணமலை தலைமை பொலிஸ் காரியாலய பொலிஸார் வசம் ஒப்படைத்தாக அவர்கள் தெரிவித்தனர்.