தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்கும் நாள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

210 0
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்காக தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்கும் நடவடிக்கை இன்று (13) நள்ளிரவுடன் நிறைவடைகின்றது.

இந்த தேர்தலுக்காக தபால் மூலம் விண்ணபிக்க தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகள், அத்தியாவசிய சேவையை வழங்கும் அதிகாரிகள், பொலிஸ் ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்களாவர்.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் அடுத்த மாதம் 11 ஆம் திகதி நடைபெற உள்ளது.

வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் ஒத்திவைக்கப்பட்ட எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை விரைவில் நடத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கமைய நடைபெறவுள்ள இந்த தேர்தலில் 2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலுக்கு அமைய 53,384 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.