ஒரு பிள்ளையின் தாய் விஷம் அருந்தி தற்கொலை- மஸ்கெலியாவில் சம்பவம்

225 0

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொக்கா சீமை தோட்ட பிரிவில்  நேற்று பகல் விவசாயத்திற்கு பயன்படுத்தும் விஷ மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த ஒரு குழந்தையின் தாய் மஸ்கெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று காலை உயிரிழந்தார்.

 

இதன்போது விஷம் அருந்திய பெண்ணை மஸ்கெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுபின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர்  டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு விஷம் அருந்தி உயிரிழந்தவர் 27 வயதுடைய கருப்பையா சர்மிளா என பொலிஸாரின் ஆரம்பங்கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பெண்ணின் சடலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்படத்தக்கது.