சுதந்திர கட்சியின் மாவட்ட ரீதியிலான மாநாடு 15 ஆம் திகதி ஆரம்பம்!

234 0

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இடம்பெறவிருக்கும் கட்சி மாநாடு இம் மாதம் 15 ஆம் திகதி இரத்தினபுரி மாவட்டத்தில் ஆரம்பமாகவுள்ளதாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

இம் மாநாடு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதில் கட்சி முக்கியஸ்தர்கள் , பிரதேச , உள்ளுராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

அடுத்தடுத்த மாநாடுகள் மாத்தளை மாவட்டத்தில் இம் மாதம் 21 ஆம் திகதி , 22 ஆம் திகதி மாத்தறை மாவட்டத்திலும் , 29 ஆம் திகதி குருணாகல் மாவட்டத்திலும் இடம்பெறவுள்ளன.

தொடர்ந்து ஒக்டோபர் 6 ஆம் திகதி காலை 9 மணிக்கு காலியிலும், அதனைத் தொடர்ந்து எல்பிட்டியவிலும் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்கால தேர்தல் நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் இந்த மாநாடுகள் இடம்பெறவுள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்தார்.