பல்கலை மாணவர்களை பொலிஸார் சுட்டுக் கொண்ட இடத்தில் இருந்து தோட்டாவின் கோது மீட்பு (படங்கள் இணைப்பு)

354 0

k800_14874892_1659438064348237_1759643775_nஎங்கு நிலை கொண்டு மோhட்டார் சைக்கிலில் சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடாத்தினார்கள் இன்று புதன்கிழமை என்பது கண்டறியப்பட்டள்ளது.
கண்டறியப்பட்ட இடத்தில் நடாத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் அங்கிருந்து துப்பாக்கி தோட்டாவின் வெற்றுக் கோது ஒன்றும் மீட்டு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி கொக்குவில் – குளப்பிட்டிப் பகுதியால் சென்று கொண்டிருந்த யாழ்.பல்கலைக்கழ இரு மாணவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடாத்தியிருந்தனர்.

k800_14826248_1659439164348127_407827935_n

இச் சம்பவத்தில் இரு மாணவர்களும் கொல்லப்பட்டிருந்தனர்.
இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் விசேட குற்றப் புலனாய்வு பிரிவினர், துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் என்ற சந்தேகத்தில் 5 பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கைது செய்திருந்தனர்.

k800_14877115_1659438691014841_1283490691_n
கைது செய்யப்பட்ட 5 பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்கரனின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

k800_14826177_1659438931014817_772331674_n
விளக்கமறியலில் உள்ள அவர்களை இன்று காலை பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவ இடத்திற்கு அழைத்து வந்த குற்றப் புலனாய்வு பிரிவினர் மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்ட இடத்தினை இனங்காட்டுமாறு கேட்டிருந்தனர்.

k800_14805633_1659438877681489_1463671315_n
இதன்படி கொக்குவில் பகுதியில் உள்ள சந்தைக் கட்டத் தொகுதிக்கு முன்பாக தாங்கள் நிலை கொண்டிருந்ததாகவும், கே.கே.எஸ் வீதியோரமாக நின்று கொண்டே தாங்கள் மோட்டார் சைக்கிலில் சென்ற மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் சந்தேக நபர்களான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

k800_14813646_1659438747681502_36036076_n
இனங்காணப்பட்ட பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட தடயவியல் ஆய்வு பொலிஸார் அங்கு துப்பாக்கியின் தோட்டாவின் வெற்று கோது ஒன்றினை அங்கிருந்து மீட்டுள்ளனர்.

k800_20161026_095001