ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி இணையாவிட்டாலும் கோட்டாபயவினால் வெற்றிபெற முடியும்-ஷெஹான் சேமசிங்க

262 0
ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கதா பொதுஜன பெரமுனவுடன் சேர்வதினால் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு எந்தவொரு நன்மையும் இல்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பலபிட்டிய பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இரு கட்சிகளின் ஆதரவாளர்களும் வெவ்வேறு கருத்து வேறுபாடுகளில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி இணையாவிட்டாலும் கோட்டாபய ராஜபக்ஷவினால் வெற்றிபெற முடியும் என பாராளுமன்ற உறுப்பனர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.