கலந்துரையாடல் தோல்வியில் முடிவடைந்தால் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவோம்-ஷான் விஜேலால்

268 0

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் முடிவடைந்தால் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதாக கிழக்கு மாகாண ஆளுனர் ஷான் விஜேலால் தெரிவித்துள்ளார்.

காலி, எல்பிட்டிய பகுதியில் நேற்று (08) இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும் ஜனாதிபதி இதுவரையில் சரியான பதில் எதையும் வழங்குவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை பெற்றுக் கொள்வதற்கு காலம் இருப்பதால் ஜனாதிபதி இந்த விடயம் தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்காமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே குறித்த கலந்துரையாடல் தோல்வியில் முடிவடைந்தால் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்ப்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.