ஜே.வி.பி யுடன் இணைவதற்கு கூட்டமைப்புக்கு சிறந்த சந்தர்ப்பம் – பிமல்

257 0

எமது நாட்டைப் பொறுத்­த­வரை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும், மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யுமே ஒரு சீரான கொள்­கையின் அடிப்­ப­டையில் அர­சி­யலை முன்­னெ­டுக்­கின்ற கட்­சி­க­ளாகும். அவ்­வாறு கொள்கை­யொன்றை மையப்­ப­டுத்தி இயங்கும் கட்­சிகள் ஒன்­றி­ணைந்து பணி­யாற்­று­வது மிகவும் இல­கு­வா­னது என்று  மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பிமல் ரத்­நா­யக்க தெரி­வித்தார்.

நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வ­ளித்­ததைத் தவிர அமைச்சு பத­வி­க­ளையோ, வரப்­பி­ர­சா­தங்­க­ளையோ பெற்­றுக்­கொள்­ளாத கூட்­ட­மைப்பை புதிய அர­சி­ய­ல­மைப்பை தரு­வ­தா­கக்­கூறி ஐக்­கிய தேசியக் கட்சி ஏமாற்­றி­விட்­டது.   இம்­மு­றையும் ஐ.தே.க. விற்கு ஆத­ர­வ­ளிப்­பதில் எவ்­வித பய­னு­மில்லை. ஆகவே மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யுடன் இணைந்த பய­ணத்தைக் கூட்­ட­மைப்­பினர் இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் இருந்தே ஆரம்­பிக்க வேண்டும் என்றும்  அவர் கேட்­டுக்­கொண்­டி­ருக்­கிறார்.

அண்­மையில் கூட்­ட­மைப்பின் உத்­தி­யோ­க­பூர்வ பேச்­சாளர் எம்.ஏ.சுமந்­திரன் எம்.பி இந்­தி­யாவின் ‘த இந்து’ நாளி­த­ழுக்கு வழங்­கிய நேர்­காணல் ஒன்றில் பின்­வ­ரு­மாறு குறிப்­பிட்­டி­ருந்தார். ‘கடந்த ஆண்டு அக்­டோபர் மாத அர­சியல் நாட­கத்­திற்குப் பிறகு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும், மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் அர­சியல் பக்­கத்தில் ஒன்­றாக நிற்கும் இரு­கட்­சிகள் என்றும், இது வர­வேற்­கத்­தக்க மாற்றம் என்றும் பலர் எம்­மிடம் கூறி­னார்கள். அத்­த­கைய சக்­தி­க­ளுடன் ஒன்­றாக வரு­வதை இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் காணலாம் என்று என்னால் கூற­மு­டி­யாது. ஆனால் நீண்­ட­கால அடிப்­ப­டையில் நோக்­கு­கையில், அதுவே செல்­வ­தற்­கான பாதை’  என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

சுமந்­தி­ர­னு­டைய இந்தக் கருத்து தொடர்பில் மக்கள் விடு­தலை முன்­னணி எத்­த­கைய நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருக்­கி­றது என்று மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பிமல் ரத்­நா­யக்­க­விடம் வின­விய போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும்  குறிப்­பி­டு­கையில்,

சுமந்­தி­ர­னு­டைய நிலைப்­பாட்டை நாங்கள் ஏற்­றுக்­கொள்­கின்றோம். எமது நாட்டைப் பொறுத்­த­வ­ரையில் ஐக்­கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன, மக்கள் விடு­தலை முன்­னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கட்­சிகள் முக்­கி­ய­மா­ன­வை­யாகக் காணப்­ப­டு­கின்­றன. அவற்றில் ஐக்­கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன ஆகி­யவை எவ்­வித கொள்­கை­யு­மற்ற விதத்­தி­லேயே தமது அர­சியல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றன. ஊழல் என்­பது ஒரு­பு­ற­மி­ருக்க, கொள்கை இல்லை என்­பது முக்­கி­ய­மாக கருத்­திற்­கொள்­ளப்­பட வேண்­டிய விட­ய­மாகும்.

ஆனால் மக்கள் விடு­தலை முன்­ன­ணியும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் ஒரு நேர்த்­தி­யான கொள்­கையின் அடிப்­ப­டையில் அர­சியல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கின்­றன. அவ்­வாறு கொள்­கையை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இயங்கும் கட்­சிகள் ஒன்­றி­ணைந்து செய­லாற்­று­வது உண்­மையில் இல­கு­வா­ன­தொன்­றாகும். கூட்­ட­மைப்பு நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்­கிய போதிலும் அமைச்சுப் பத­விகள் எவற்­றையும் பெற்­றுக்­கொள்­ள­வில்லை.

அதன் தலைவர் இரா.சம்­பந்தன் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்டு சுமார் 3 வரு­டங்­களின் பின்­ன­ரேயே அவ­ருக்கு ஒழுங்­கான உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­தலம் வழங்­கப்­பட்­டது. கூட்­ட­மைப்­பினர் பெரி­தாக எந்த வரப்­பி­ர­சா­தத்­தையும் பெற்­றுக்­கொள்ள­வில்லை. எனினும் ஐக்­கிய தேசியக் கட்சி புதிய அர­சி­ய­ல­மைப்பை தரு­வ­தா­கக்­கூறி கடந்த 4 வரு­டங்­க­ளாக அவர்­களை ஏமாற்­றி­யதைத் தவிர வேறு எத­னையும் செய்­ய­வில்லை.

இம்­மு­றையும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்­கு­வதில் எவ்­வித பய­னு­மில்லை. எனவே மக்கள் விடு­தலை முன்­ன­ணியும், கூட்­ட­மைப்பும் இணைந்த பயணம் இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் இருந்தே ஆரம்­பிக்க வேண்டும். அந்­த­வ­கையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்குள் ஒன்­றுக்கு மேற்­பட்ட கட்­சிகள் காணப்­ப­டு­கின்­றன.

இரா.சம்­பந்தன், சித்­தார்த்தன் மற்றும் செல்வம் அடைக்­கல­நாதன் ஆகி­யோரின் கட்­சி­க­ளுடன் பாரா­ளு­மன்­றத்தில் உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யி­ருக்­கிறோம். வெகு விரை­வி­லேயே கூட்­ட­மைப்­பி­ன­ருடன் உத்­தி­யோ­க­பூர்வ பேச்­சு­வார்த்­தை­களை நடத்­து­வ­தற்கு எதிர்­பார்த்­தி­ருக்­கிறோம் என்றார்.

இதே­வேளை,   ஏன் ஜே.விபியால் வாக்­கு­களை பெற­மு­டி­ய­வில்லை என்று வின­விய போது பிமல் ரத்­நா­யக்க பின்­வ­ரு­மாறு பதி­ல­ளித்தார்.

இதனை ஒரு இல­கு­வான உதா­ரணம் மூலம் விளக்­கலாம். கீரைக்­கஞ்சி உடல் ஆரோக்­கி­யத்­திற்கு சிறந்­தது என்­றா­லும்­கூட அதனை பெரும்­பா­லானோர் விரும்­பு­வ­தில்லை. அதே­வேளை மது­பானம் உட­லுக்குக் கேடு என்­றாலும் மது­பா­ன ­சா­லை­களில் எப்­போதும் கூட்டம் நிறைந்­தி­ருக்கும். அதே­போன்று தான் இத­னையும் நோக்­க­வேண்­டி­யுள்­ளது.ஊழ­லற்ற சீரான கொள்­கை­யுடன் கூடிய அரசியல் கலாசாரத்தையே நாங்கள் பின்பற்றி வருகின்றோம். ஆனால் சில பிரபல நிறுவனங்கள், இலத்திரனியல் ஊடகங்கள், மதத்தலைவர்கள் எம்மை விரும்புவதில்லை. அவர்களுடைய ஊழலை மையப்படுத்திய கொள்கைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்றவை ஆட்சிக்கு வருவதே உகந்ததாக இருக்கின்றது. எனினும் தற்போது புத்திஜீவிகள், தொழில்புரிவோர் உள்ளிட்டோர் அக்கட்சிகளில் இணைந்துகொள்வதில்லை. அவர்கள் மக்கள் விடுதலை முன்னணியிலேயே இணைகின்றனர். இதுனையே நாம் பாரிய மாற்றமாக நோக்குகின்றோம்.