கட்சியிலுள்ள அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியது அவசியம்-ஹர்ஷ

235 0

நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப்பெற வேண்டுமென்றால் கட்சியிலுள்ள அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியது அவசியமென அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டுதான் இந்த பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு ஒன்றிணைந்தால்தான் எமக்கான பலம் கிடைக்குமெனவும் அதற்கான முயற்சிகளைத்தான் தற்போது நாம் ஆரம்பித்துள்ளோம் எனவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.