ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையில் இடம்பெறவிருந்த பேச்சுவார்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்த பேச்சுவார்த்தை நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற வேண்டும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, குறித்த பேச்சுவாத்தையை இன்று அலரி மாளிகையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிகழ்ச்சி நிரல்கள் காரணமாக இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறறு.
எவ்வாறாயினும், இந்த பேச்சுவார்த்தை நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது