சஜித் வடக்கிற்கு நாளை செல்கிறார்..

347 0

ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதித் தலை­வரும், அமைச்­ச­ரு­மான சஜித் பிரே­ம­தாஸ நாளை வடக்­கிற்கு விஜ­யம் ­செய்­ய­வுள்ளார்.

வடக்­கிற்கு விஜயம் செய்யும் இவர் காலையில் யாழ்.முற்­ற­வெ­ளியில் அமைக்­கப்­பட்­டுள்ள என்­டர்­பி­ரைசஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்­டத்தின் கண்­காட்­சியின் இறுதி நாள் நிகழ்வில் பங்­கேற்­க­வுள்ளார்.அத­னை­ய­டுத்து பிற்­பகல் ஒரு­ம­ணி­ய­ளவில் கிளி­நொச்­சிக்­கு­ செல்லும் அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ, கண்­டா­வளை மற்றும் கரைச்சி பிர­தே­ச­செ­ய­லாளர் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தியில் தலா இரண்டு வீட­மைப்புத் திட்­டங்­களை மக்கள் பாவ­னைக்­காக கைய­ளிக்கும் நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக பங்­கேற்­க­வுள்ளார்.

முன்­ன­தாக என்­டர்­பி­ரைசஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்­டத்தின் கண்­காட்­சி­யினை நேற்­றை­ய­தினம் ஆரம்­பித்து வைப்­ப­தற்கு நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வினால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் பிரதமர் ரணில் மட்டுமே பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.