ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாஸ நாளை வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
வடக்கிற்கு விஜயம் செய்யும் இவர் காலையில் யாழ்.முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள என்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.அதனையடுத்து பிற்பகல் ஒருமணியளவில் கிளிநொச்சிக்கு செல்லும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ, கண்டாவளை மற்றும் கரைச்சி பிரதேசசெயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தலா இரண்டு வீடமைப்புத் திட்டங்களை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக பங்கேற்கவுள்ளார்.
முன்னதாக என்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கண்காட்சியினை நேற்றையதினம் ஆரம்பித்து வைப்பதற்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் பிரதமர் ரணில் மட்டுமே பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.