துறைசார் நிபுணர்களின் அங்கத்துவத்தினைக் கொண்டிருக்கும் ‘சிறந்த எதிர்காலத்திற்கான தொழில்சார் நிபுணர்கள்’ (வியத்கம)அமைப்பின் வருடாந்த மாநாடு இன்று மாலை 4 மணிக்கு ஷங்கிரில்லா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் நாடளாவிய ரீதியில் இருந்து 2300 பேர் வரையிலான துறைசார் நிபுணர்கள் பங்கேற்கவுள்ளனர். மேலும் இம்மாநாட்டில் பங்கேற்பதற்கு கட்சித்தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இம்மாநாட்டில் விசேட உரையாற்றவுள்ள பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்புச்செயலாளருமான கோத்தாபய ராஜபக்ஷ, தனது ஆட்சியில் முன்னெடுக்கப்படவுள்ள அரசகொள்கைகள் பற்றி விரிவாக தெளிவு படுத்தவுள்ளதோடு, அதன் செயற்பாட்டு திட்டங்கள் தொடர்பிலும் விளக்கமளிக்கவுள்ளார். அத்துடன் பல்துறைசார் நிபுணர்களின் கேள்விகளுக்கும் தனது உரையின் பின்னர் அவர் பதிலளிக்க உள்ளார்.
மூன்று வருடங்களுக்கு முன்னதாகவே ‘பலம்பெறும் செயற்றிட்டம்’ என்ற தொனிப்பொருளில் நாட்டின் அரசகொள்கைகள் தொடர்பிலான வரைவு தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் சமகால சூழலுக்கு அமைவாக அவற்றில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை மையப்படுத்தியே இம்மாநாட்டில் கருத்துப்பகிர்வு நடைபெறவுள்ளது.
மேலும் இம்மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித்தலைவருமான மஹிந்த ராஜபக் ஷவும் பங்கேற்கவுள்ளதோடு உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
ஆட்சிமாற்றத்தின் பின்னர் 2016ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து நாடுதிரும்பியிருந்த முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ
‘சிறந்த எதிர்காலத்திற்கான தொழில்சார் நிபுணர்கள்’ (வியத்கம) என்றபெயரில் அமைப்பினை ஸ்;தாபித்திருந்ததோடு நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான கலந்துரையா டல்களையும் மேற்கொண்டு துறைசார் நிபுணத்துவம் வாய்ந்த வர்கள் மேற்படி அமைப்பின் அங்கத்தவர்களாக இணைத்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.