விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்தார்!

302 0

சாரதி தூங்கியதால் கப் ரக வாகனம் வீதியைவிட்டு விலகி ஏற்பட்ட விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தீவகம் அல்லைப்பிட்டிச் சந்தியில் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.

சம்பவத்தில் யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தகர் ஒருவரின் வாகனமே விபத்துக்குள்ளாகியது. அவரது உறவினரான வயோதிபப் பெண்ணே அதிர்ச்சியில் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வேலணையிலிருந்து ஊர்காவற்றுறை – யாழ்ப்பாணம் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கப் ரக வாகனம் அல்லைப்பிட்டிச் சந்தியில் விபத்துக்குள்ளாகியது. அதன் சாரதி தூக்கத்தில் வாகனத்தை செலுத்தியதில் நிலைகுலைந்ததால் விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் வாகனத்தில் பயணித்த வயோதிப்பெண் உயிரிழந்த நிலையில்  அதில் பயணித்த ஏனையவர் பாதிப்புகளின்றித் தப்பித்தனர்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேரதிக விசாரணைனளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.