வெலிகடை சிறைச்சாலை உயர் அதிகாரியின் கொலை விவகாரம் : பாதாள உலகக்குழுவினருக்கு தொடர்பு!

286 0

வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சிப்பாடசாலையின் சிறைச்சாலை அதிகாரியின் கொலை சம்பவத்துடன், பாதாளக்குழு உறுப்பினருக்கு   தொடர்பு  இருக்கின்றமை விசாரணைகளின்  போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக  அம்பலாங்ககொடை  பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி  இந்திக  கமகே  தெரிவித்தார்.

கடந்த  சில  வருடங்களுக்கு  முன்னர்  களனி பகுதியில்  வைத்தியர் ஒருவர்   கொலை செய்யப்பட்ட  சம்பவம்  தொடர்பில்  கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள  ஜயலத் சில்வா  எனப்படும்  பாதாளக்குழு உறுப்பினர்   திட்டமிடலுக்கு  அமையவே  சிறைச்சாலை  அதிகாரியின்  கொலை  இடம்  பெற்றுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.