தற்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்மாமானங்கள் எதிர்பார்ப்பு மிக்கவையாக இருக்கின்றன. ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஆட்சியமைப்பது போன்று கடந்த காலங்களில் நாம் எடுத்த தவறான தீர்மானங்களால் தான் அண்மையில் பல சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. எனவே இனி எடுக்கும் தீர்மானங்கள் அவ்வாறல்லாமல் தீர்க்கமானவையாக இருக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
சுதந்திர கட்சிக்கு ஆட்சியமைக்கக் கூடிய அதிகாரம் இல்லாவிட்டாலும் ஆட்சியாளரைத் தெரிவு செய்யக் கூடிய பலம் இருக்கிறது. அத்தோடு ஜனாதிபதி தேர்தல் காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றமையால் எமது முடிவு எதிர்பார்ப்பானதாகவும் மிகுந்த முக்கியத்துவமுடையதாகவும் அமைந்துள்ளது. ஒருபோதும் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்று தெரிந்தும் ஜே.வி.பி தனித்து போட்டியிடத் தீர்மானித்தது. இந்நிலையில் நாமும் தீர்க்கமானதொரு முடிவை எடுக்கவேண்டிய இடத்தில் இருக்கின்றோம்.