கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவருக்கு விளக்கமறியல்

238 0

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுக்கலை தோட்டத்தில் நேற்று முந்தினம்  கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.

குறித்த இருவரும் அப்பிரதேசத்தில்  கஞ்சா விற்பனையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்ததாக பிரதேச மக்கள் வழங்கிய தகவலையடுத்து லிந்துலை பொலிஸாரால் குறித்த  இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யும் போது அவர்களிடம் சிறிய அளவு கஞ்சா பொதிகளே  இருந்ததாகவும் அதனை தொடர்ந்து நேற்று அவர்களை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவர்கள் இருவருக்கும் செப்டம்பர் 17ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் பிரமோதய  ஜெயசேகர உத்தரவிட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இவர்களுக்கான விளக்கமறியல் காலம் நீடிக்கலாம் என்றும் பொலிஸார்  தெரிவித்தனர்.