ஶ்ரீ.சு.கட்சியின் 68 ஆவது தேசிய சம்மேளனம் இன்று

225 0

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 68 ஆவது தேசிய சம்மேளனம் இன்று இடம்பெறவுள்ளது.

இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் 68 ஆவது தேசிய சம்மேளம் இடம்பெறவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

“தீன்துவ ஹரி அதட்ட” (தீர்ப்பு சரியான பக்கம்) என்ற எண்ணக்கருவின் கீழ் இம்முறை சம்மேளம் இடம்பெறவுள்ள நிலையில், இதன்போது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் வௌிப்படுத்தப் படவுள்ளது.

இதன்போது ஜனாதிபதியால் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.